:
சென்னை: பட்டினப்பாக்கத்தில் இன்று சுனாமி நினைவு (IAS Office Radhakrishnan Car Accident) தினத்தை முன்னிட்டு கூட்டுறவுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்துவதற்காக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத நேரத்தில் அவரது கார் விபத்தில் சிக்கியது.
தமிழகம் முழுவதும் இன்று (டிசம்பர் 26) சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் மீனவ குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்துவதற்காக உணவு மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தன்னுடைய இனோவா காரில் பட்டினப்பாக்கம் இணைப்பு சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் சென்னையில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி பயணம் செய்த டூரிஸ்ட் வாகனம் ஒன்று தவறுதலாக நேருக்கு நேர் மோதியது. இதில் ஐ.ஏ.ஏஸ். அதிகாரியான டாக்டர் ராதாகிருஷ்ணனின் கார் முன்பக்கம் பலத்த சேதமானது.
போலீசார் நடத்திய முதற்கட்ட நடவடிக்கையின்படி டூரிஸ்ட் வாகனம் சாலையின் வளைவில் தவறுதலாக ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்ள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷஷ்டவசமாக எந்த காயங்களும் இன்றி கூட்டுறவுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தப்பித்தார். மேலும், அவர் தாமாகவே முன்வந்து போக்குவரத்து நெரிசலையும் சரி செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.