ஓசூர்: தமிழ்நாட்டின் ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலத்தின் (Hosur Bangalore Metro Rail Project) தலைநகரான பெங்களூருவை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன் என்பவர் கேள்வி எழுப்பினார். அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஓசூரிலிருந்து பெங்களூரு செல்லும் வகையிலான மெட்ரோ ரயில் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஓசூரில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டால், பெங்களூருவுக்கு வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் ஓசூர் திரும்பும் பணியாளர்களுக்கு நல்ல பயனுள்ளதாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.