விஜயநகரம்: Wedding reception groom collapses : மாப்பிள்ளை மயங்கி விழுந்தார்: திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என பெரியவர்கள் கூற கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த பழமொழி அனைவரின் வாழ்க்கையிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. சில நேரங்களில் திருமணம் சிலரது வாழ்வில் நரகத்தை தோற்றுவிக்கும். இதற்கு சான்றாக விஜயநகரம் ஹோஸ்பேட் வட்டத்தில் உள்ள பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது சோகம் சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருமண வாழ்க்கையில் நுழைவதற்கான, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆனால் விதி மணமகன் தலை எழுத்தை வேறு மாதிரியாக எழுதியிருந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நின்றிருந்த 26 வயது மணமகன் ஹொன்னூர் சுவாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி (Groom collapse) விழுந்தார்.
உடனே குடும்பத்தினர் அனைவரும் ஹொன்னூர் சுவாமியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஹொன்னூர் சுவாமிக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததால், அவரை உடனடியாக ஹோஸ்பேட்டை அரசு மருத்துவமனையில் (Hospital) சேர்க்க மருத்துவர் அறிவுறுத்தினார். அவரது குடும்பத்தினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, வழியிலேயே மாரடைப்பால் ஹொன்னூர் சுவாமி உயிரிழந்தார்.
இன்று ஹொன்னூர் சுவாமி திருமண வாழ்வில் நுழையவிருந்தார். ஆனால் மணமகன் இறந்ததால் கொண்டாட்டமாக இருந்த திருமண வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் மும்முரமாக இருக்க வேண்டிய குடும்பத்தினர், மணமகனின் இறுதிச் சடங்குகளை நடத்தியது (Conducted funeral rites) பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.