Government Boys High School Playing State Level: கோலாட்ட போட்டியில் மாநில அளவில் விளையாடி வரும் பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

பாப்பாரப்பட்டி: தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய (Government Boys High School Playing State Level) சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் கோலாட்ட போட்டியில் இன்று கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் குறிப்பாக தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக கோலாட்ட போட்டியும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

சென்னையில் மாநில அளவிலான கோலாட்டம் போட்டியில் விளையாட உள்ள பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள். அருகில் தமிழ் ஆசிரியர் மாதையன்.

அதன்படி முதலில் தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர்கள் பென்னாகரத்தில் நடைபெற்ற போட்டியில் வட்டார அளவில் முதலிடத்தை பெற்றனர். அதன் பின்னர் மாவட்ட அளவிலான போட்டியில் தருமபுரி அதியமான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியுடன் விளையாடியதில் தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தை பெற்றனர்.

அதனை தொடர்ந்து அவர்கள் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். அதன்படி சென்னையில் உள்ள மேடவாக்கம் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இன்று விளையாடி வருகின்றனர். இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் இப்போட்டியில் பாப்பாரப்பட்டி மாணவர்கள் கோலாட்ட போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். அப்பள்ளி மாணவர்கள் கூறும்போது, நாங்கள் கண்டிப்பாக மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மாணவர்களை தமிழ் ஆசிரியர் மாதையன் வழி நடத்தி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.