சென்னை: Seizure of 800 grams of Gold worth if 35.84 Lakhs by Chennai Air Customs. சென்னை விமான நிலையத்தில் ரூ.35.84 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் எம் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், துபாயில் இருந்து கடந்த 13ம் தேதி விமானம் மூலம் சென்னை வந்த முருகன் கோவிந்தராஜூ என்ற பயணியை இடைமறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, 3 தங்க பிஸ்கெட்டுகள், ஒரு தங்க பெல்ட் பட்டை ஆகியவற்றை அவர் அணிந்திருந்த பேண்ட்டில் மறைத்து எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 580 கிராம் எடைகொண்ட தங்கம் ரூ.25.99 லட்சமாகும்.
இதேபோல், அதே நாளில் துபாயில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டதில், விமானத்தின் முன்பக்கம் இருந்த கழிப்பறையில் ஒரு தங்கச்சங்கிலி மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட 220 கிராம் எடைகொண்ட அந்த தங்கச்சங்கிலியின் மதிப்பு ரூ.9.85 லட்சமாகும். இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்கத்துறை ஆணையர் எம் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.