Free Sarvadarshan token: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் முதல் இலவச தரிசன டிக்கெட்

திருப்பதி: Free Sarvadarshan timeslot tokens will be resumed in Tirupati from November 1st. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் முதல் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறங்காவலர் குழுவின் முடிவின்படி, பக்தர்களின் வசதிக்காக, நவம்பர் 1 ஆம் தேதி முதல் திருப்பதியில் இலவச சர்வதரிசன நேர டோக்கன்கள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்படும்.

சர்வதர்சனம் டோக்கன்கள் பூதேவி வளாகம், சீனிவாசம் மற்றும் இரண்டாவது சோல்ட்ரி (ரயில் நிலையம் பின்புறம்) வழங்கப்படும். சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் ஆகிய நாட்களில் 20,000 முதல் 25,000 டோக்கன்களும், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 15,000 டோக்கன்களும் பக்தர்களுக்குக் கிடைக்கும்.

அன்றைய தினம் டோக்கன்கள் வழங்கப்பட்டு, ஒதுக்கீடு முடிந்ததும் கவுன்டர்கள் மூடப்படும். டோக்கன் இல்லாத பக்தர்கள் நேரடியாக திருமலைக்கு வந்து வைகுந்தம் வரிசை வளாகம்-2 வழியாக சுவாமி தரிசனம் செய்யலாம்.

மேலும் ஸ்ரீவானி அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் மாதவத்தில் அறைகளை முன்பதிவு செய்யலாம். ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கு திருப்பதியில் உள்ள மாதவத்தில் அறைகளை முன்பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கு மாதவத்திலேயே ஆஃப்லைன் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.