SM Krishna : கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி

Former CM SM Krishna admitted to hospital : கிருஷ்ணாவுக்கு கடுமையான தலைவலி மற்றும் காய்ச்சல். இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.எம்.கிருஷ்ணா சிகிச்சை அளித்து வருவதாகவும், கவலை இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் (SM Krishna) உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ள‌ காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.

கிருஷ்ணனுக்கு கடுமையான தலைவலியும் காய்ச்சலும் இருந்தது. இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கு உரிய‌ சிகிச்சை அளித்து வருவதாகவும், கவலைபடும்படி எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், காய்ச்சல் தணிந்ததும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் (Discharge) செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, விட்டல் மல்லையா சாலையில் உள்ள வைதேகி மருத்துவமனையில் (Vaidegi Hospital) அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது தெரிய வந்தது. எஸ்.எம்.கிருஷ்ணா என்று அழைக்கப்படும் சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா, 2009 முதல் 2012 வரை இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், மாநிலத்தின்16 வது முதல்வராகவும் இருந்தார்.

கர்நாடகாவின் 16 வது முதல்வராக பதவி வகித்த அவர். இவை அனைத்திற்கும் மேலாக, மகாராஷ்டிராவின் 19 வது ஆளுநராக 2004 முதல் 2008 வரை பதவியில் இருந்தார். கிருஷ்ணா 1962 இல் பிரஜா சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார். பின்னர் 1983-84 இல், அவர் காங்கிரஸ் கட்சியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, இந்திரா காந்தியின் தலைமையின் கீழ் அக்கட்சியில் சேர்ந்தார், பின்னர் 1984 மற்றும் 1985 க்கு இடையில் ராஜீவ் காந்தியுடன் இணைந்தார். எஸ்.எம்.கிருஷ்ணா 2017 ஜனவரியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா (SM Krishna resigned from Congress in January 2017)செய்து மார்ச் மாதம் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவர் முதல்வராக பதவி வகித்தப்போதுதான், பெங்களூரு உள்ளிட்ட மாநில அளவில் தகவல், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.