Forest department: சிக்கமகளூர் பஜ்ரங்கதல மாவட்ட தலைவர் ஆக்கிரமிப்பு செய்த நிலத்ததில் இருந்த காபி செடியை வெட்டி வனத்துறைக்கு சேர்த்த வனதுறை அதிகாரிகள் சிக்கமகளூர் மாவட்டம் முத்தோடி வனவிலங்கு சரணாலய பகுதி அருகே உள்ள கெசுவினமணே என்னும் கிராமத்தில் இந்து அமைப்பை சேர்ந்த பஜ்ரங்கதள மாவட்ட தலைவர் சிரிகாந்த் பை அவருக்கு

சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்திற்கு ஆறுகே சுற்றிலும் சுமார் 43 ஏக்கரை வனத்துறைக்கு சொந்தமானதை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து அதில் பல ஆண்டுகளாக காப்பி செடி வைத்து விளைச்சல் செய்து

வருமானம் பெற்றுக் கொண்டதாகவும் பலமுறை அவருக்கு நோட்டீஸ் கொடுத்தும் ஆனால் அவர் தானாக எடுப்பதற்கு முன்வராத காரணதால் வனத்துறை அதிகாரி ஸ்ரீ ஹரிசாகரா என்பவர் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து சென்று ஒரே நாளில் 43 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த காப்பிச் செடிகளை வெட்டி வனத்துறைக்கு சேர்த்தனர்



