புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் (First Jallikattu Started) கந்தர்வக்கோட்டை அருகே தச்சன்குறிச்சி பகுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வெகு விமர்சையாக நடந்து வருகிறது.
போட்டி தொடங்கப்படுவதற்கு முன்னர் மாடுகள், வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் நிறைவு பெற்று காலை 8 மணிக்கு வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் சுமார் 700 காளைகள் மற்றும் 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்து வருகின்றனர்.