தருமபுரி: மன்னர் காலத்தில் கட்டப்பட்டதும் மிகவும் பிரசித்தி (Perumal Temple Heaven Gate Opened) பெற்ற வரலாற்று பெருமையான கோட்டை பெருமாள் கோவிலில் இன்று (ஜனவரி 2) அதிகாலை 3.45 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பென்னாகரம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ., ஜி.கே.மணி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா திருப்பதி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏழுமலையான் பெருமாள் கோவில்களில் வைகுண்டம் ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தருமபுரியில் உள்ள கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியானது இன்று (ஜனவரி 2) அதிகாலை 3.45 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பென்னாகரம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ., ஜி.கே.மணி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதே போன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.