Deer bitten by a dog: நாய் கடித்து உயிருக்கு போராடிய மான்; சிகிச்சை அளித்த பொதுமக்கள்

பரமக்குடி: A deer that fought for its life after being bitten by a dog. பரமக்குடியில் நாய் கடித்தால் உயிருக்கு போராடிய புள்ளிமானை பொதுமக்கள் மீட்டு சிகிச்சை அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வைகை ஆற்றின் கரையோரம் புள்ளமானை நாய் கடித்து குதறியதால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் மானை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பரமக்குடி அடுத்த சூரியூர், அண்டக்குடி, நயினார்கோவில், வாணியவல்லம், கீழப்பெருங்கரை ஆகிய கிராமப் பகுதிகள் அடர்ந்த காடுகள் நிறைந்த வனப்பகுதியாகும். இங்கு அதிகளவில் காட்டு விலங்குகள் சுற்றித்திரிந்து வரும். அவ்வாறு அப்பகுதியில் புள்ளிமான் ஒன்று சுற்றித்திரிந்துள்ளது.

பெரும்பாலும் வனத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவும்போது புள்ளிமான்கள் அடிக்கடி தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்வது வழக்கம். அவ்வாறு பரமக்குடியில் வைகை ஆற்றின் கரையோரம் சுற்றித்திரிந்த புள்ளிமானை நாய்கள் கடித்து குதறியுள்ளது. காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மானை பார்த்து மனவேதனை அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அந்த மானை மீட்டு ஆட்டோவில் ஏற்றி கால்நடை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து, வனத்துறையினரின் வருகையை எதிர்பார்க்காமல் பொதுமக்கள் உடனடியாக உயிருக்கு போராடிய புள்ளிமானை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததை பலரும் வெகுவாக பாராட்டினர்.