Courtralam waterfalls: குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

தென்காசி: Tourists have been banned from bathing due to flooding in Courtralam waterfalls. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவியில் குளிக்க தடை. வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாக உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவியில் குளிக்க தற்காலிகமாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதன்படி குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் குற்றாலம் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

இதனிடையே சபரிமலை சீசன தொடங்கி ஐயப்ப பக்தர்கள் ஏராளாமானோர் இங்கு குளிப்பதற்கான வந்த நிலையில் அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.