ரூ.1,627.83 கோடி மதிப்பில் பாரத்நெட் திட்டம் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

mk-stalin
மாநில கல்வி கொள்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

BharatNet scheme: சென்னை, தலைமை செயலகத்தில் தகவல் தொழில் நுட்பவியல் துறை சார்பில் ரூ.1,627.83 கோடி மதிப்பில் பாரத்நெட் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் , தமிழகத்தில் ரூ.1,627.83 கோடி மதிப்பீட்டிலான பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியம், முத்தலகுறிச்சி கிராமப் பஞ்சாயத்தில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியினை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:- * “பாரத்நெட்” திட்டம் என்பது, தமிழகத்தில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் “கண்ணாடி இழை கம்பி வடம்” மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டமாகும்.

இத்திட்டம், தமிழக அரசின் “தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் ” என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.

  • இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1 Gbps அளவிலான அலைக்கற்றை அனைத்து 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் வழங்கப்படும்.
  • தொகுப்பு A-ல் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, சென்னை (NOC), ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
  • தொகுப்பு B-ல் கடலூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
  • தொகுப்பு C-ல் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், கோயம்பத்தூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
  • தொகுப்பு D-ல் கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் செயல்படவுள்ளது.
  • CM inaugurates BharatNet scheme

இதையும் படிங்க: Electricity in Pakistan: பாகிஸ்தானில் மின்சாரத்தை பயன்படுத்த கட்டுப்பாடு