Chikkamagaluru: சிக்கமகளூர் மாவட்டம் கடூர் தாலுகா கடூர் சுற்று வட்டாரங்களில் தனிமையில் வரும் பெண்களிடம் தங்கச் சங்கிலி மற்றும் பொருட்களை பறித்து சென்றது சம்பந்தமாக நான்கு வழக்கு பதிவுகள் ஆகியிருந்தன
இது சம்பந்தமாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர் எஸ்பி விக்ரம் அமட்டே கூறுகையில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட வந்த கும்பலை பிடிப்பதற்கு தனிபடை அமைத்ததாகவும் அந்தப் படையினர் பெலகாவியைச் சேர்ந்த கண்ணேஸ்வரா என்கின்ற ஒருவனையும் பசவராஜீ ராஜு ஆகிய மொத்தம் மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 7 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்ததாகவும்
அவர்கள் திருட்டுக்கு பயன்படுத்திய ஒரு மோட்டார் பைக்கை துமகூர் மாவட்ம் சிறா அருகே உள்ள ஒரு கிணற்றில் வீசியதாகவும் மற்றொரு பல்சர் பைக் ஒன்றை பறிமுதல் செய்ததாகவும் மாவட்ட எஸ்பி தெரிவித்தார் திருடர்களைப் பிடித்த போலீஸாருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்து நினைவுபறிசும் கொடுத்தார்



