Bakiyaraj joined AIADMK: ஓ.பி.எஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் பாக்கியராஜ்

சென்னை: Actor and director Bhakiyaraj joined AIADMK in the presence of AIADMK coordinator O.Panneerselvam. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் அதிமுகவில் இணைந்தார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன், திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜ் சந்தித்தார்.

இதனையடுத்து பாக்கியராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஏற்கனவே நான் அதிமுகவில் தான் இருந்து வருகிறேன், இன்று அதிகார பூர்வமாக இணைத்துள்ளேன், அனைவரும் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம், விரைவில் எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பேன். அனைவரும் ஒன்று சேர்வார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா மக்களுக்காக பாடுபட்டனர். அவர்களுக்குப்பின், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என தொடர்ச்சியாக கட்சியின் பெயர் மக்களிடம் நல்லபடியாக இருந்து வருகிறது. கட்சிக்கு திருஷ்டியை போல சோதனை வந்துள்ளது. மீண்டும் பழைய பலத்துடன் கட்சி இருக்க ஓ.பன்னீர்செல்வம் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும்.

மீண்டும் அனைவரும் ஒன்றுபட்டு பழையபடி தொண்டர்களுக்கு புத்துணர்வு கிடைக்கும் வகையில் அதிமுக பலம் பெறும். அதற்கு என்னை இணைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டுமோ, எப்படி செயல்பட வேண்டும் அப்படி செயல்பட தயாராக இருக்கிறேன். எம்ஜிஆர் கட்சியை காப்பாற்றும் வகையில், சின்ன ஒரு தொண்டனாக இவர்கள் உடனிருந்து கட்சிப் பணிகளை ஆற்ற தயாராக இருக்கிறேன்.

அனைவரும் ஒன்றிணைய கொஞ்சம் நேரம் எடுக்கும். அதிமுகவில் இருந்தவன் தான். இனி முறையாக இணைந்து செயல்படுவேன். கட்சி நன்றாக இருக்க வேண்டும். இதை எடப்பாடி பழனிசாமி தராப்பிடம் முடிந்தால் நானும் நேரடியாக சென்று தெரிவிப்பேன். அனைவரும் இணைவதற்கு என்னால் ஆன முயற்சிகளை செய்வேன் என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் பாக்கியராஜ் எம்ஜிஆரின் கலை உலக வாரிசு என அறிவிக்கப்பட்டவர். அவரது மறைவுக்குப்பின் ஜானகி அணியை ஆதரித்தார். பின்னர் தனிக்கட்சி தொடங்கினார். அதனைத்தொடர்ந்து திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். கடந்த ஓராண்டாக அதிமுக தொடர்பாக கருத்துகளை தெரிவித்து வந்த அவர், தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.