New Ordered for public Ganeshotsava : பொது விநாயகர் சதுர்த்திக்காக
பல‌ கட்டுப்பாடுகள்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடும் எச்சரிக்கை

Air Pollution Control Board : மாசு வாரியத்திற்கு எதிராக விநாயகர் திருவிழா கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பெங்களூரு விநாயகர் திருவிழா கமிட்டி தலைவர் பிரகாஷ் ராஜூ இந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு : New Ordered for public Ganeshotsava : மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்: ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின் போது பொது விநாயகர் சிலைகளை வைத்து பிரமாண்டமாக வழிபடுதுவது வாடிக்கை. இதற்கு அரசு, மாநகராட்சி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டவை கட்டுப்பாடுகள் விதிப்பதும் வாடிக்கைதான். இதற்கு விநாயகர் திருவிழா கமிட்டியும் அதிருப்தி தெரிவித்து வருவதும் வழக்கமாக நடைபெறுவதான். விநாயகர் சதூர்த்தியையொட்டி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு பெங்களூரு விநாயகர் திருவிழா கமிட்டி தலைவர் பிரகாஷ் ராஜூ கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி (Ganesha Chaturthi) விழாவின் போது பொது விநாயகர் திருவிழாவிற்கு பல‌ கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இந்து அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்துவதும், அரசுகள் அதற்கு பிறகு கட்டுப்பாடுகளை திரும்ப‌ பெறுவதும் பொதுவாக நடைபெறும் நிகழ்வாகும். விநாயகர் பெருவிழாவில் அதிக அளவில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அரசு ஆண்டுதோறும் கட்டுப்பாடுகள் விதிப்பது உண்மைதான். பெங்களூரில் பிஓபி விநாயகர் சிலையை நிறுவக்கூடாது என்று பெங்களூரு மாநகராட்சி மற்றும் அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது.

இந்த விதி பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது விநாயகர் சிலையின் உயரம் மற்றும் அகலம் குறித்த விதியை உருவாக்க பெங்களூரு மாநகராட்சி (BBMP) மற்றும் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநிலமாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே ஒரு விதிமுறையை வெளியிட்டு, அதில் 5 அடிக்குள் சிலை வைக்க‌ விதி வகுக்கப்பட்டது. கடந்த ஆண்டும் பொது இடங்களில் 2 முதல் 4 அடி விநாயகர் சிலைகளை மட்டுமே நிறுவ வேண்டும் என அரசு பரிந்துரைத்திருந்தது. ஆனால் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த விதி திரும்ப பெறப்பட்டது. தற்போது மீண்டும் 5 அடிக்குள் சிலைகள் வைக்க வேண்டும் என்ற விதி வகுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாசு வாரியத்திற்கு எதிராக விநாயகர் திருவிழா நடத்துபவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பெங்களூரு விநாயகர் திருவிழா கமிட்டி தலைவர் பிரகாஷ் ராஜு (Prakash Raju) இந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். எத்தனை அடி விநாயகர் சிலை வைக்க வேண்டும் என்று இவர்கள் ஏன் முடிவு செய்ய வேண்டும்? விநாயகரை எங்கள் விருப்பம் போல விநாயகர் சிலைகளை வைப்போம். இவர்கள் ஏன் திரும்பத் திரும்ப இப்படி விதிகளை வகுக்குகிறார்கள்?. விநாயகர் சிலை வைப்பதற்காக கடும் விதிகளை திரும்பப் பெறாவிட்டால், இம்முறை விதானசவுதா முன் விநாயகர் சிலை வைத்து போராட்டம் நடத்தப்படும். மொத்தத்தில், விநாயகர் சதுர்த்திக்கு முன்பே சிலை வைப்பதற்கு விதிக்கள் வகுக்கப்பட்டு உள்ளதால் மாநிலத்தில் விதிகளுக்கு எதிராக எதிர்ப்பு வலுத்துள்ளது.