ராய்ச்சூர்: Jaggesh visited Mantralaya : கன்னட திரைத்துறையின் மூத்த நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜக்கேஷ் ராகவேந்திரரின் தீவிர பக்தர். ராகவேந்திரா சுவாமிகளை எப்போதும் வழிபடும் நடிகர் ஜக்கேஷ், ராகவேந்திரரின் 351வது ஆராதனை மகா உற்சவத்தை முன்னிட்டு இன்று ராகவேந்திரரை தரிசனம் செய்வதற்காக மந்த்ராலயத்தில் உள்ள அவரது கோவிலுக்கு வந்திருந்தார்.
ஆராதனை மகா உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ மடம் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக அமைக்கப்பட்ட ஸ்ரீ மடத்தை தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜக்கேஷ், ஸ்ரீமடத்தின் தலைமையின் கீழ் மடத்தின் மாண்பு அதிகரித்து வருவதாக கூறினார். நாம் எதையும் செய்யத் தேவையில்லை ராகவேந்திரரே எல்லாவற்றையும் செய்வார். ராகவேந்திரரின் மீது பாரத்தைப் போட்டு (Put the burden on Raghavendra) எந்த விஷயத்தை முன்னெடுத்துச் செல்வேன். அதிகாரம் கிடைத்தவுடன் கையை அழுக்காக்குபவர்களை ராகவேந்திரர் மன்னிக்க மாட்டார். அதுபோன்றவர்கள் ஒரு சாலையில் ஆடை இல்லாமல் நிற்க வேண்டிய சூழல் உருவாகும் என்றார்.
ராகவேந்திரரின் அருளைப் பெற வேண்டும் என்றால் நல்லெண்ணத்துடன் பணியாற்ற வேண்டும். ஒரு காலத்தில் பேருந்து கட்டணத்திற்கு 39 ரூபாய்க்கு கூட என்னிடம் பணம் இருக்கவில்லை. தற்போது ராகவேந்திரரின் ஆசியால் தான் இப்போது பெரிய நடிகராகவும், அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் (Member of Rajya Sabha) ஆகி உள்ளேன் என்றார்.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசிய ஜக்கேஷ், மக்களுக்கு மத்திய அரசின் பல திட்டங்கள் தெரியாமல் உள்ளது. பல நிதிகள் பயன்படுத்தப் படாமல் திரும்பப் அனுப்பப் படுகின்றன. எனவே அரசு அறிவிக்கும் திட்டங்களை சரியாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் கட்சியின் மூத்த தலைவர் சந்தோஷ் ஜி ஆகியோரால் வழிநடத்தப்படுகிறோம். உலகம் முழுவதும் போர் நிறுத்தப்பட வேண்டும், அதாவது பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) போன்ற திறமை உள்ளவர்கள் நாட்டிற்கு தேவை. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வலிமையான நாடுகளை சாத்வீகமாக மாற்றும் வல்லமை பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டுமே உள்ளது என்றார்.