Single elephant : கோவை அருகே ஒற்றை யானை அட்டகாசம் : வனத்துறையினர் முகாம்

முருகன்பதி கிராமத்தில் உலா வந்த காட்டு யானை.

கோயம்புத்தூர் : single elephant roars : கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானை தோட்டத்திற்குள் புகுந்து வாழை, தென்னை மரங்களை சூறையாடியது.

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள முருகன்பதி கிராம பகுதியில் சில நாட்களாக நள்ளிரவில் காட்டு யானைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து (Enter the farm garden) அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்றிரவு ஒன்றை காட்டு யானை அதே பகுதியில் உலா வந்தது. அப்போது குழந்தைமணி என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்த அந்த யானை சுமார் 100க்கும் மேற்பட்ட வாழை, தென்னை மரங்களை (Banana and coconut trees) சூறையாடியது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். எனவே வனத்துறையினர் (Forest Department) அப்பகுதியில் முகாமிட்டு யானையின் நடமாட்டை கண்டறிந்து காட்டுக்குள் விரட்டியடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.