A Rare Giant Eagle: தூத்துக்குடியில் அரியவகை ராட்சத கழுகை மீட்ட வனத்துறை

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே (A Rare Giant Eagle) ராட்சத கழுகு ஒன்றை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே இருக்கும் சங்கரன்குடியிருப்பு காட்டுப்பகுதியில் இன்று காலை ராட்சச கழுகு ஒன்று நின்று கொண்டிருப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். இது பற்றிய தகவலை வனத்துறையினருக்கு கொடுத்துள்ளனர்.

இதன் பின்னர் அங்கு சென்ற வனத்துறையினர் கழுகை மீட்டு கூண்டில் அடைத்தனர். அது மிகவும் வயது முதிர்வு காரணமாக பறக்க முடியாமல் தவித்து வந்திருப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். மேலும், அங்கிருந்தவர்கள் கழுகை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

முந்தைய செய்தியை பார்க்க:New Infections In India: இந்தியாவில் உயரும் கொரோனா வைரஸ்: 196 பேருக்கு புதிய தொற்று

முந்தைய செய்தியை பார்க்க:Heavy rain in 10 districts today: 10 மாவட்டங்களில் இன்று கனமழை