3 girls suicide : விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட மூன்று சிறுமிகள்: காரணத்தை கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள்?

இந்த மூன்று சிறுமிகளும் விஷம் அருந்தியது குறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற போலீசார் விஷம் அருந்தியதற்கான காரணத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

மத்தியப் பிரதேசம்:  3 girls suicide: பள்ளிக்குச் சென்ற 16 வயதுடைய மூன்று சிறுமிகள் அவசர முடிவு எடுத்துள்ளனர். விடுமுறையில் பள்ளிக்கு சென்ற 3 சிறுமிகள் ஒன்று சேர்ந்து விஷம் குடித்துள்ளனர். இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன். ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று (ஆகஸ்ட் 28) நடந்துள்ளது.

செஹோர் மாவட்டத்தில் உள்ள அஷ்டா நகரில் (In Ashta Nagar in Sehore District) உள்ள ஒரே பள்ளியில் படித்து வந்த இந்த 16 வயது சிறுமிகள் 3 பேர் நேற்று பள்ளியை முடித்து விட்டு 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தூருக்கு பேருந்தில் சென்றனர். அங்கு விஷ பாட்டிலை வாங்கிக்கொண்டு வெறிச்சோடிய பகுதிக்கு சென்று விஷத்தை அருந்தி உள்ளனர். அவர்களில் இருவர் நேற்றிரவு உயிரிழந்த நிலையில், மற்றையவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். இந்த மூன்றும் பேரும் பூஜா, ஆரத்தி மற்றும் பாலக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மூன்று சிறுமிகளும் விஷம் அருந்தியது குறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற போலீசார் விஷம் அருந்தியதற்கான காரணத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவத்திற்கான காரணம் என்ன..?
மூன்று சிறுமிகளில் ஒருவர் தனது காதலனைச் சந்திக்க தனது இரண்டு தோழிகளுடன் இந்தூருக்கு வந்திருந்தார் (One of the three girls had come to Indore with her two friends to meet her boyfriend). காதலனிடம் இருந்து தனக்கு அழைப்பு வராததால், அவனிடம் நேரடியாகப் பேசுவதற்காக தன் தோழிகளை அவன் வசித்த இந்தூருக்கு அழைத்து வந்தாள். காதலன் தன்னை சந்திக்க மறுத்த‌தால் விஷம் அருந்துவது என்று அவள் ஏற்கனவே முடிவு செய்திருந்தாள். இதற்காக முன்பு விஷம் பாட்டிலை வாங்கி வந்தாள். இந்தூரை அடைந்த பிறகு, அவள் தன் காதலனை அழைத்து, அவனைச் சந்திக்கச் சொல்கிறாள், மேலும் அவனுக்காக அவள் தோழிகளுடன் இந்தூர், பவர்கும் என்ற பூங்காவில் நீண்ட நேரம் காத்திருக்கிறாள். ஆனால் காதலர் சந்திக்க வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சிறுமி, வெறிச்சோடிய பகுதிக்கு சென்று விஷம் அருந்தி உள்ளார் (went to a deserted area and drank poison). அப்போது அவருடன் இருந்த மற்றொரு சிறுமியும் குடும்ப பிரச்னை காரணமாக விஷம் அருந்தியுள்ளார். மற்றொரு சிறுமி இவருக்கு நெருங்கிய தோழி என்றும், அவரது மரணத்தின் உண்மையை ஜீரணிக்க முடியவில்லை என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், அருகில் இருந்தவர்கள் அவரை பார்த்து உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக‌ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.