IPL Mini Auction: ஐபிஎல் மினி ஏலம், எத்தனை பேர் பங்கேற்பார்கள் தெரியுமா?

கொச்சி: ஐபிஎல் (IPL Mini Auction) 2023ம் ஆண்டுக்கான மினி ஏலம் நாளை கேரள மாநிலம், கொச்சியில் நடைபெற உள்ளது. இதுவரையில் 991 பேர் ஐபிஎல் மினி இடத்தில் பங்கேற்பதற்காக தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

அதில் 741 பேர் இந்தியர், வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர்களும் பங்குபெறுவதற்கு பதிவு செய்துள்ளனர். அதிபட்சமாக ஆஸ்திரேலியாவில் இருந்து 57 வீரர்களும் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்காவில் இருந்து 52 வீரர்களும், வெஸ்ட் இண்டீசில் 33 வீரர்களும், இங்கிலாந்தை சேர்ந்த 31 வீரர்களும், நியூசிலாந்தை சேர்ந்த 27 வீரர்களும், இலங்கையை சேர்ந்த 23 வீரர்களும், ஆப்கானிஸ்தானில் இருந்து 14 வீரர்களும், அயர்லாந்தை சேர்ந்த 8 வீரர்களும் மற்றும் வங்கதேசம், ஜிம்பாப்வே உட்பட நாடுகளில் இருந்தும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.