துபாய்: டென்னிஸ் விளையாட்டில் இருந்து சானியா மிர்ஸா (Sania Mirza Retire To Tennis) ஓய்வுப் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய நாட்டை சேர்ந்தவர் சானியா மிர்ஸா. இவர் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்து வந்தார். இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டு துபாயில் வசித்து வருகிறார். இரண்டு பேரும் கடந்த 10 ஆண்டுகளாக துபாயிலேயே வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அடுத்த மாதம் துபாயில் நடைபெறுகின்ற டென்னிஸ் போட்டியுடன் விளையாட்டில் இருந்து விடைபெறுவதாக தகவல்கள் வெளி வருகின்றன. இது பற்றி மகளிர் டென்னிஸ் அசோசியேஷனின் இணைய தளத்தில் பேட்டி ஒன்று வந்துள்ளது. அதில் துபாய் டூட்டி ஃப்ரீ டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடருடன் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திட்டமிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.