Sri Lanka Won The Toss:டி20 கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இலங்கை

மும்பை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள (Sri Lanka Won The Toss) இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது. அதன்படி இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (ஜனவரி 3) நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போட்டத்தில் இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது. தற்போது இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டயா அணியை வழி நடத்த இருக்கிறார். இந்திய அணியில் சிவம் மவி, ஷூப்மான் கில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளனர். மும்பை மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே அதிகமான வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதன்படி டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் வெற்றி யாருக்கு என்பது இரண்டு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.