PM congratulates P.V.Sindhu: காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: PM congratulates P.V.Sindhu on winning Gold medal in Badminton: பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் கனடாவின் மிச்செல் லியை தோற்கடித்து தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

அவரது எதிராக வியைாடிய வீரர் நன்றாக விளையாடினாலும், சிந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்தினார். இவர் 21-15, 21-13 என்ற கணக்கில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றார்.

சிறப்பான தொடக்கத்தை தந்த பி.வி.சிந்து, முதல் ஆட்டத்தில் பாதியிலேயே 11-8 என முன்னிலை வகித்தார். மிச்செல் லிக்கும் இவருக்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது. ஆனால் ஒவ்வொரு முறையும் மிச்செல் லி தோல்வியை தழுவினார். இதனால் முதல் போட்டியில் சிந்து 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இரண்டாவது ஆட்டத்தை மிச்செல் லி சிறப்பாக தொடங்கினார். கனடிய வீராங்கனை தொடர்ந்து தவறுகளை செய்து கொண்டே இருந்தார். மேலும் ஒவ்வொரு தோல்வியின் போதும் சிந்துவின் முன்னிலையை விரிவுபடுத்தினார். இரண்டாவது போட்டியின் பாதியில் சிந்து 11-6 என முன்னிலையில் இருந்தார். பாட்மிண்டனில் இந்தியாவிற்கான முதல் CWG 2022 தங்கப் பதக்கத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அவருக்கு இன்னும் பத்து புள்ளிகள் தேவைப்பட்டன.

இடைவேளைக்குப் பிறகு, சிந்துவும் லியும் 57 ஷாட்களின் பரபரப்பான ஆட்டத்தை மேற்கொண்டனர். இறுதியில் சிந்துவின் முன்னிலை 13-11 என குறைக்கப்பட்டது.

சிந்து இரண்டாவது போட்டியில் தொடர்ந்து போராடி இறுதியில் 21-13 என வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம், 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனது முதல் மகளிர் ஒற்றையர் பதக்கத்தையும், CWG 2022 இல் பாட்மிண்டனில் இந்தியாவின் முதல் தங்கத்தையும் வென்றார்.

மேலும் இன்று நடைபெறும் பாட்மிண்டன் போட்டிகளில் மேலும் இரண்டு தங்கங்களை கைப்பற்ற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பி வி சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தனித்துவமான பி வி சிந்து சாம்பியன்களின் சாம்பியன் ஆவார். தனது தனித்திறனை மீண்டும் மீண்டும் அவர் வெளிப்படுத்துகிறார். அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் உறுதி வியக்கவைக்கிறது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள். எதிர்கால போட்டிகளில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.