Union Sports Minister Anurag Thakur : இந்தியாவிற்கு யாராலும் ஆணையிட முடியாது:பிசிபியின் அச்சுறுத்தலுக்கு மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்குர் பதில்

2023 ஆசியக் கோப்பையை நடுநிலையான இடத்தில் நடத்துவது, 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் இந்திய வருகையைப் பாதிக்கலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கூறியதை அடுத்து, பிசிசிஐ இந்த விஷயத்தை ஆராயும் என்று அனுராக் தாக்கூர் கூறினார்.

தில்லி: No one can dictate to India: Union Sports Minister Anurag Thakur : 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை போட்டிகள் அண்டை நாட்டிற்குச் செல்லாது என்பதால், 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் வெளியேறக்கூடும் என இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது. இதனையடுத்து வியாழக்கிழமை, இந்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கைக்கு, பதில் அறிக்கையை வெளியிட்டார். அதில் இந்தியாவிற்கு யாரும் ஆணையிட முடியாது என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் உட்பட அனைத்து தகுதியான நாடுகளும் ஒருநாள் உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்குச் வர‌ வரவேற்கப்படுகின்றன (All eligible nations including Pakistan are welcome to visit India for the ODI World Cup). 2023 ஆசியக் கோப்பையை நடத்தும் இந்தியா, அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்குச் செல்லாது. போட்டி நடுநிலையான இடத்தில் நடைபெறும் என்று ஜெய் ஷா கூறியதிலிருந்து வார்த்தைப் போர் தொடங்கியது. வின் அறிக்கை ஒரு நாள் (ODI) உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகுவதற்கு வழிவகுக்கும் என்று பிசிபி பின்னர் பதிலளித்தது.

2023 ஆசியக் கோப்பையை நடுநிலையான இடத்தில் நடத்துவது (Hosting the 2023 Asia Cup at a neutral venue) என்ற கருத்து, வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் இந்தியப் பயணத்தை பாதிக்கலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கூறியதை அடுத்து, பிசிசிஐ இந்த விஷயத்தை ஆராயும் என்று மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக‌ வாரியம் அதை மதிப்பாய்வு செய்து கருத்து தெரிவிக்கும். இந்தியா ஒரு விளையாட்டு பூமி (India is a sports land). இங்கு பல உலகக் கோப்பைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அடுத்த உலகக் கோப்பையும் இந்தியாவில் நடத்தப்படும், மேலும் உலகம் முழுவதிலுமிருந்து அணிகள் இதில் பங்கேற்கும். எந்த துறையிலும் இந்தியாவை புறக்கணிக்க முடியாது. இந்தியா கிரிக்கெட் உலகிற்கு நிறைய பங்களித்துள்ளது மற்றும் உலகக் கோப்பை பிரமாண்டமான, வரலாற்று மற்றும் வெற்றிகரமானதாக இருக்கும் தாக்கூர் தெரிவித்தார்.

“உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற அனைத்து அணிகளும் (இந்திய மண்ணில் விளையாட) அழைக்கப்பட்டுள்ளன. பலமுறை பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட வந்துள்ளது (Pakistan team has come to play in India many times). இந்தியா (யாராலும்) கட்டளையிடப்படும் நிலையில் இல்லை என்று நான் நினைக்கிறேன், யாரும் அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை என்றார் அவர்.