Death of playing Kabaddi: துள்ளி குதித்து மயங்கி விழுந்த கபடி வீரர்; விளையாட்டின்போது விபரீதம்

கடலூர்: The death of fainting while playing kabaddi near Panruti: பண்ருட்டி அருகே கபடி விளையாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 21) கபடி வீரர். இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாமாண்டு படித்து வருகிறார். மேலும் சேலத்திலேயே கபடி அகாடமி (Kabaddi Academy in Salem) ஒன்றில் பயிற்சியும் பெற்று வந்தார்.

இந்நிலையில், பண்ருட்டி அருகே உள்ள மானடிகுப்பம் கிராமத்தில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி (District level kabaddi tournament) நடைபெற்றது. இந்த போட்டியில் விமல்ராஜ் கலந்து கொண்டு விளையாடினார். அதில் துள்ளி குதித்து விளையாடிய அவர், எதிரணி வீரர் பிடிக்க முற்பட்டார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த விமல்ராஜ், மார்பில் அடிபட்டு சுயநினைவில்லாமல் கிடந்தார்.

அதிர்ச்சியில் சக வீரர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் விமல்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இகுறித்து தகவலறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை என்பதால் மரணத்துக்கான குறிப்பான காரணம் இன்னும் தெரியவில்லை.

கல்லூரி மாணவர் விமல்ராஜ் கபடி விளையாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.