Ajith Kumar won Medals: துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை அள்ளிக்குவித்த அஜித்குமார்

திருச்சி: Actor Ajith Kumar won 4 gold and 2 bronze medals: திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் 4 தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை குவித்துள்ளார்.

47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெற்று வருகிறது. சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப் பட்டு, சப் யூத் 16 வயது வரை, யூத் 19 வயது வரை, ஜூனியர் 21 வயது வரை, சீனியர் 21 முதல் 45 வயதுவரை, மாஸ்டர் 45 முதல் 60 வயது வரை, சீனியர் மாஸ்டர் 60 வயதுக்கு மேல் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது.

கடந்த 24ம் தேதி தொடங்கிய இந்த போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுத லில் பயிற்சி பெற்ற 1,300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கடந்த 27-ந் தேதி நடிகர் அஜித்குமார் மாஸ்டர் பிரிவில் பங்கேற்றார். 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என 3 சுடுதளத்திலும் பிஸ்டல் பிரிவு போட்டிகளில் கலந்து கொண்ட அவர் இலக்கை நோக்கி சுட்டார்.

இதையடுத்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற அஜித்குமார் அன்றைய இரவே திருச்சியிலிருந்து சென்னை புறப்பட்டு சென்றார். இந்தநிலையில் மாநில துப்பாக்கி சுடும் போட்டி பிஸ்டல் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று மன்தினம் நடந்தது. ஓய்வுபெற்ற டி.ஜி.பி.தேவாரம் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். இதில் மொத்தம் 162 பேர் பதக்கங்களை வென்றனர்.

இதில் நடிகர் அஜித்குமார், சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணிபிரிவில் தங்கப்பதக்கமும், ஸ்டாண் டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப்ப தக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி (ஐ.எஸ். எஸ்.எப்) பிரிவில் தங்க பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும் என 4 தங்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றார்.

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப்பில் நடைபெறும் மாநில பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் இன்று கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் கலந்துகொண்ட நடிகர் அஜித்குமார் திடீரென ரசிகர்களை பார்த்து கையை அசைத்தார். இதனைத்தொடந்து ரசிகர்களும் பொதுமக்களும் அவரை பார்க்க குவிந்து வந்தனர். கூட்டத்தை கலைக்க போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.