M.K.Stalin: திமுக அரசை வீணாக விமர்சனம் செய்பவர்களுக்கு பதில் கூற விரும்பவில்லை: தமிழக‌ முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு: Tamilnadu Cm M.K.Stalin: திமுக அரசை வீணாக விமர்சனம் செய்பவர்களுக்கு பதில் கூற விரும்பவில்லை என்று தமிழக‌ முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


தமிழ்நாடு கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் சனிக்கிழமை ரூ. 500.83 கோடியில் 80.750 பயனாளிகளுக்கு நல‌உதவி திட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: திமுக ஆட்சியை பிடித்த பிறகு ஓய்வில்லாமல் உழைத்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரண் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் பல லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர்.

சிலர் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக திமுக அரசை வீணாக விமர்சனம் செய்து வருகின்றனர். வீண் விமர்சனங்களுக்கு பதில் கூற விரும்பவில்லை. திமுகவின் சாதனைகள் என்ன என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். திமுக ஆட்சியில் விவசாயிகள் உள்ளிட்டோர் பயனடைந்துள்ளனர். பயனடைந்த மக்களிடம் கேளுங்கள். அவர்கள் அதற்கு உரிய பதில் அளிப்பார்கள்.

நகராட்சியாக இருந்த கரூரை மாநகராட்சியாக உயர்த்தப்பட்ட திமுக அரசுதான். கரூர் மாவட்டத்தில் ஜவுளி பொருள்கள் காட்சியரங்கம், ஜவுளி உற்பத்தி வளாகம் அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ. 47 கோடியில் திருமாநிலையூரில் நவீன புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றார்.