AIADMK Organization Secretary ponnaiyan : நான் பேசுவது போல யாரோ மிமிக்ரி செய்துள்ளனர் : அதிமுக அமைப்புச் பொன்னையன்

சென்னை : AIADMK Organization Secretary ponnaiyan : எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது போன்று வெளியான ஆடியோ நான் பேசியது இல்லை. யாரோ மிமிக்ரி செய்துள்ளனர் என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக தொண்டர்கள் இரட்டை இலை பக்கம் நிற்பதாகவும், தலைவர்கள் பணத்தின் பக்கம் நிற்கின்றனர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை. சி.வி சண்முகம் கையில் சாதி அடிப்படையில் 19 எம்எல்ஏக்கள் உள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள 42 எம்எல்ஏக்களில் 9 எம்எல்ஏக்கள் மட்டுமே எடப்பாடி பக்கம் உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக திமுகவை விமர்சிப்பதில்லை. ஒற்றைத் தலைமைக்கு வர எடப்பாடியாருக்கு எதிராக கே.பி.முனுசாமி சதி செய்ததாகவும் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் (AIADMK Organization Secretary ponnaiyan) பேசிய ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால், வெளியான ஆடியோ போலியானது என்று பொன்னையன் (ponnaiyan) விளக்கம் அளித்துள்ளார். அந்த ஆடியோவை நானும் கேட்டேன். 100 சதம் யாரோ வாய்ஸ் மாடுலேஷன் டெக்னாலஜி மூலம் என்னைப் போல‌ மிமிக்ரி செய்துள்ளனர். இதன் மூலம் எனக்கு களங்கம் உருவாக்கவதன் மூலமாக எடப்பாடி தலைமையேற்றுள்ள அதிமுகவிற்கு களங்கம் கற்பிக்க திட்டமிட்டு பொய்யாக வெளியிடப்பட்டுள்ள ஆடியோ அது. அதில் என்னுடைய குரல் இல்லை. வாங்க, போங்க என்ற பண்பை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய நபர் நான். கொச்சையாக அருவருக்கத்தக்க வார்த்தையில் திட்டுவது என்பதை சிந்தித்தும் பார்க்க மாட்டேன்.

இந்த ஆடியோவை வெளியிட்டவர்களுக்கு கட்டாயம் காலம் பதில் சொல்லும் ஓபிஎஸ், இபிஎஸ் ஐ ஒன்று சேர்த்த பணியில் பிரதான பங்கு நான் வகித்திருக்கிறேன். என்னை தாக்குவதற்கு காரணம் என் மூலமாக செய்தி வெளியே வந்தால் மக்கள், தொண்டர்கள் நம்புவார்கள். அதிமுக‌ இயக்கத்திற்கு எதிராக‌ இத்தகைய சூழ்ச்சியை செய்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் மீது எனக்கு பெரிய மரியாதையுள்ளது. திமுக இனி ஆட்சிக்கு வரவே முடியாது என்ற அளவுக்கு எடப்பாடி பழனிசாமியின் புகழ் இமயம் போல உயர்ந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவு பெட்டகம். யாரும் வழிநடத்த வேண்டிய நிலையில் அவர் இல்லை என பொன்னையன் (ponnaiyan)தெரிவித்துள்ளார்.