Participation In Rahul Gandhis Yatra: ராகுல் காந்தியின் யாத்திரையில் ஏன் பங்கேற்றேன்: கமல்ஹாசன் பரபரப்பு தகவல்

சென்னை: சென்னையில் மக்கள் நீதி மன்றத்தின் நிர்வாகிகள் கூட்டம் (Participation In Rahul Gandhis Yatra) நடைபெற்றது. இதில் கட்சியை அடுத்த கட்ட பணிகள் எப்படி இருக்க வேண்டும் என்பன பற்றி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், இந்தியாவில் மத அரசியலை பாஜக செய்து வருவதாகவும் மதத்திற்குள் பிரினை செய்வதை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற ராகுல் காந்தி எம்.பி. கலந்து கொண்ட யாத்திரையின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

மேலும் மத அரசியல் இந்தியாவை சிதைத்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க முக்கிய காரணமாக அமைந்தது என்றார். கட்சியின் வளர்ச்சி பணிகள் பற்றி அவர் பேசும்போது, கட்சியினர் அனைவரும் ஒரே வித கருத்தோடு செயல்பட வேண்டும் என்றும் கட்சி தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது என்பதால் தலைவர் கூறுகின்ற கருத்தை மட்டுமே நிர்வாகிகள் வெளியிடங்களில் பேச வேண்டும் எனவும் அவர் கூறினார்.