சென்னை: பேரறிஞர் அண்ணா மற்றும் பெரியார் ஆகியோரின் கொள்கைகளை (Gayathri Raghuram Join Dmk) ஏற்றுக்கொண்டு யார் திமுகவிற்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று காயத்ரி ரகுராமுக்கும் பொருந்தும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் பேசும்போது. தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ் ஒளிக்கு அறக்கட்டளை நிறுவப்படுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழின் மகத்துவத்தையும், மேன்மையை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் நமக்கு எல்லாம் பெரும் கடமை உள்ளது. பெண் கல்வியை ஊக்குவிப்பதில் திமுக அரசு செயல்படுகிறது.
மேலும் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காயத்ரி ரகுராம் கூறியிருப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. காயத்ரி ரகுராம் திமுகவில் இணைய விரும்பினால் இணைத்துக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, பெரியார் மற்றும் அண்ணாவின் கொள்கையை பின்பற்றினால் தாராளமாக திமுகவுக்கு வரலாம் என்றார். விரைவில் காயத்ரி ரகுராம் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.