AIADMK: சட்டப்பேரவையில் ஜெயலலிதா குறித்து விமர்சனம்

சட்டப்பேரவையில் ஜெயலலிதா குறித்து விமர்சனம்

AIADMK: சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசிய காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வபெருந்தகை மன்னிக்க கேட்க வேண்டும் என்றும் அவரது பேச்சை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் கண்டித்து வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய காங்கிரஸ் குழு தலைவர் செல்வபெருந்தகை கும்பகோணம் மகாமகத்தில் நடந்த விபத்து குறித்தும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் விமர்சித்து பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி அதிமுகவினர் எதிர்கட்சி தலைவர் எட்பபாடி பழனிச்சாமி தலைமையில் அவைக்குள்ளேயே சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செல்வபெருந்தகை திமுகவின் தூண்டுதலின் பேரில் பேசி வருவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியினர் செல்வபெருந்தகை மீதான வழக்குகளை பட்டியிலிட்டு சமூக வலைத்தளங்களில் கண்டித்து வருகின்றனர்.

சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரது பேச்சை திரும்ப பெற வேண்டும் என்ற பிரச்சாரத்தை சமூக வலைத்தளங்களில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: Group 4: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்