Siddhant Veer Suryavanshi : பிரபல தொலைக்காட்சி நடிகர் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது தவறி விழுந்து உயிரிழந்தார்

பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி ((Siddhant Veer Suryavanshi)) ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது கீழே விழுந்து உயிரிழந்தார்.

புதுடெல்லி: பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி (Siddhant Veer Suryavanshi) ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். நடிகர் சித்தாந்த் சூர்யவன்ஷி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக காலமானதாக கூறப்படுகிறது.

நடிகர் சித்தாந்த் சூர்யவன்ஷிக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்த நடிகர் சித்தாந்த் சூர்யவன்ஷி, ‘க்குசும்’, ‘கசௌதி ஜிந்தகி கே’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் நடித்தார். பிரபல புகைப்படக்கலைஞர் வைரல் பயானி (Photographer Viral Biyani) அவரது திடீர் மறைவு செய்தியைப் பகிர்ந்து கொண்டார். “முன்னர் ஆனந்த் சூர்யவன்ஷி என்று அழைக்கப்பட்ட நடிகர் சித்தாந்த சூர்யவன்ஷி பற்றிய அதிர்ச்சியான செய்தி. அவரது மனைவி அலெசியாவின் குடும்பத்தினருக்கு இரங்கல். ஓம் அமைதி” என்று தெரிவித்தார்.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பால் மரணம் அடைந்தார். நடிகர் சித்தாந்த் எப்போதும் மிகவும் ஃபிட்டாக இருந்தார். சித்தாந்த் சமீபத்தில் தனது பெயரை ஆனந்த் என்பதில் இருந்து சித்தாந்த் சூர்யவன்ஷி என்று மாற்றிக்கொண்டார். சித்தாந்த் சூர்யவன்ஷி ‘சுஃபியானா இஷ்க் மேரா’, ‘ஜித்தி தில் மானே நா’, ‘வாரிஸ்’, ‘சாத் பெரே: சலோனி கா சஃபர்’, ‘கசௌதி ஜிந்தகி கே’ உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் (Television shows) ஒரு பகுதியாக இருந்தார். அவர் கடைசியாக ஜீ டிவியில் ‘கியூ ரிஷ்டன் மே கட்டி பட்டி’ நிகழ்ச்சியில் காணப்பட்டார்.

சமீபகாலமாக ஜிம்மில் இருக்கும் போது கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திரையுலகில் பலர் இப்படித்தான் இறந்திருக்கிறார்கள். இந்தி தொலைக்காட்சி நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி அகால மரணமடைந்துள்ளார். ஜிம்மில் உடற்பயிற்சி (Exercise in the gym) செய்து கொண்டிருந்த போது அவர் சுருண்டு விழுந்து மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 46. அவரது மறைவுக்கு தொலைக்காட்சி மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திரையுலகில் ஏற்பட்ட அகால மரணம் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.