Pm Narendramodi Flagged Vande Bharat Train: தாயின் இறுதிச்சடங்கை முடித்த 2 மணி நேரத்திலேயே நாட்டுக்காக பணியாற்ற தொடங்கிய பிரதமர் மோடி

குஜராத்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி 100, (Pm Narendramodi Flagged Vande Bharat Train) குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்.

தாயார் மறைவு தொடர்ந்து பிரதமர் மோடி மருத்துவமனைக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் தன்னுடைய தாயின் உடலை தோளில் சுமந்து வந்தார். பின்பு தாயாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி தகனம் செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே நாட்டிற்காக மீண்டும் பணியாற்ற தொடங்கினார் பிரதமர் மோடி.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று துவங்கி வைப்பதாக இருந்தது. ஆனால் தாய் ஹீராபென் மறைவால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது. ஆனால் தன்னுடைய தாயின் இறுதிச்சடங்கு முடிந்த சில மணி நேரத்திலேயே காணொளி காட்சி வாயிலாக வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார். இவரது சேவையை நினைத்து பலரும் இணையத்தில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தனது தாய் மறைந்தாலும் நாட்டிற்கான பணியை தொடர்ந்து செய்து வருகின்றார் என்ற கமெண்ட்களையும் பார்க்க முடிகிறது.