98 Year Old Man Released Ayodhya Jail:அயோத்தி சிறையில் விடுதலையான 98 வயது முதியவருக்கு பிரியா விடை

டெல்லி: உத்தர பிரதேசம் மாநிலத்தை (98 Year Old Man Released Ayodhya Jail) சேர்ந்த 98 வயதுடைய ராம்சுரத் என்ற முதியவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அவர் அயோத்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே தண்டனை முடிந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே இவர் விடுதலை பெறுவதாக இருந்தார். ஆனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதால் சுமார் 90 நாட்கள் பரோலில் சென்றார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின்னர் மீண்டும் சிறைக்கு சென்ற அவர் தண்டனை காலம் முடிந்த பின்னர் விடுதலை பெற்றார்.

இந்நிலையில், முதியவர் சிறையில் இருந்து விடுதலை அடைந்ததும், அவருக்கு சிறை ஊழியர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து பிரியா விடை கொடுத்தனர் இது பற்றி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.