There Is No Corona Virus In Mumbai: முதன்முறையாக மும்பையில் கொரோனா தொற்று இல்லை

மும்பை: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று (There Is No Corona Virus In Mumbai) கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இதில் முதல் மற்றும் இரண்டாவது அலையில் கொரோனா தொற்று அதிகரித்தது. இதனால் நாட்டில் தொற்று எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. அதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்புகள் அதிகமாக இருந்தது. நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுதலாகவே இருந்தது. நாட்டிலேயே முதல் இடத்தை மும்பை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி கொரோனா தொற்று பதிவானது.

இந்நிலையில், மும்பை நகரில் கடந்த 2020ம் ஆண்டுக்கு பின்னர் முதன் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை என்று மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.