Electric vehicle battery blast : விஜயவாடாவில் EV பேட்டரி வெடித்து ஒருவர் பலி

Electric vehicle battery blast
விஜயவாடாவில் EV பேட்டரி வெடித்து ஒருவர் பலி

Electric vehicle battery blast : விஜயவாடாவில் மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்ததில் ஒரு நபர் உயிரிழந்தார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், விஜயவாடாவில் உள்ள சூர்யராவ்பேட்டையைச் சேர்ந்த இறந்த சிவக்குமார் வெள்ளிக்கிழமை புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி, பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக நேற்று இரவு வைத்திருந்தார்.

மேலும் இன்று அதிகாலையில் பேட்டரி வெடித்து தீப்பிடித்ததில் சிவக்குமார், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தீக்காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிவக்குமார் உயிரிழந்தார். அவரது மனைவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாகிவிட்டது.இன்றைய மாற்று தேர்வாக மின்சார வாகனங்கள் அறிமுகமாகியுள்ளது.

மின்சார ஸ்கூட்டர்கள் மலிவான, வசதியான மற்றும் வேடிக்கையான போக்குவரத்து வழிமுறைகள். நீங்கள் எங்கும் செல்லலாம். சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ளூர் வேலைகளை வேடிக்கையாகவும் விரைவாகவும் எளிதாகவும் செய்து மகிழுங்கள். உங்கள் வீடு அல்லது வணிக வளாகங்களின் நடைபாதையில் கூட நீங்கள் மின்சார ஸ்கூட்டர்களை ஓட்டலாம்.Electric vehicle battery blast

இதையும் படிங்க : Kothu Dosai: சூப்பரான கொத்து தோசை செய்வது எப்படி?

ஒரு வாரத்திற்குள் அடுத்தடுத்து நடக்கும் 2-வது சம்பவம் இதுவாகும். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் ஏப்ரல் 19-ம் தேதி அன்று மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்ததில் 80 வயது முதியவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். மின்சார ஸ்கூட்டர்கள் போக்குவரத்துக்கு மகிழ்ச்சியான வழி. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டுவது, நிலத்தில் பனிச்சறுக்கு விளையாடுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

( EV battery blast one person died )