Cruelty on Dog: நாயை காரில் கட்டி இழுத்த இதயமற்ற மருத்துவர்

ஜோத்பூர்: cruelty on Dog : நாம் அனைவரும் கடவுளின் மறு உருவமாக மருத்துவரை உயிரைக் காப்பாற்றுபவராகப் பார்த்தால், ஒரு மருத்துவர் இதயமற்ற வேலையைச் செய்துள்ளார். நாயை கயிற்றால் காரில் கட்டி இழுத்துச் சென்று விலங்கு பிரியர்களின் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்ப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் ரஜ்னீஷ் குவாலா (Dr. Rajneesh Gwala hails from Jodhpur), நாயை கயிற்றால் கட்டி, கயிரைக் காரில் கட்டி நாயை இழுத்து சென்றுள்ளார். பின்னால் வரும் பைக்கர் ஒருவர் நாயை இந்த மருத்துவர் ரஜ்னீஷ் சித்திரவதை செய்யும் காட்சியை படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் மருத்துவர் மீது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நாய்களை கொடுமைப்படுத்திய டாக்டருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்த வீடியோவை டாக் ஹோம் பவுண்டேஷன் (Dog Home Foundation) தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நாய்களுக்கு இந்த மாதிரி கொடுமை நடந்தாலும் யாரும் தடுக்க முயலவில்லை என்பது இன்னொரு வேதனையான விஷயம். கடைசியாக, ஒரு பைக் ஓட்டுநர் காரை நிறுத்தி, ஏன் நாயை இப்படி இழுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டு, காரில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து, அந்த நாய் சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

காரை பின்னால் இழுத்துச் சென்றதால் நாயின் கால் எலும்புகள் உடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் (Doctors said that the dog’s leg bones are broken). இது தெருநாய் என்பது தெரிந்தது, இந்த நாய் பலமுறை மருத்துவர் வீட்டு முன் வந்து கொண்டிருந்தது. அதனால் அதை விரட்ட முயன்றுள்ளார். வீட்டின் முன் வந்த நாய் நிற்காமல் இருக்க‌, கயிற்றால் காரின் பின்னால் இழுத்துச் சென்றது தெரிய வந்தது.

டாக்ஸ் ஹோம் அறக்கட்டளை, டாக்டர் ரஜ்னீஷ் மீது விலங்கு வதை சட்டத்தின் கீழ் புகார் (Complaint under Animal Cruelty Act) அளித்துள்ளது மற்றும் ஜோத்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் என்ன சொன்னாலும் ஒரு மருத்துவர் இப்படி ஒரு ஊமை விலங்கிடம் கொடுமையாக நடந்து கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது.