Chinook helicopters: இந்திய விமானப் படையில் அமெரிக்காவின் ‘சினூக்’ ஹெலிகாப்டர் சேவை தொடருமா ?

வாஷிங்டன் : Chinook helicopters : வரிசையாக தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அமெரிக்க ராணுவம் தனது சக்தி வாய்ந்ததாக கருத்தப்பட்ட‌ சினூக் ஹெலிகாப்டர்களின் செயல்பாடுகளை முற்றிலும் நிறுத்திவிட்டது. அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் செயல்பாடுகள் நின்றுவிட்டதால், இந்தியாவின் விமானபடைக்கு ஹெலிகாப்டர் மாறுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க ராணுவத்தில் 1960-ல் இருந்து செயல்படும் சினூக் ஹெலிகாப்டர்கள் போர் பூமி தைத்ய என்று அழைக்கின்றன. ஆனால் சமீபத்தில் இந்த சினூக் ஹெலிகாப்டரில் தொடர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அமெரிக்க ராணுவம் இந்த சினூக் ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவதைப் நிறுத்தி உள்ளது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு ஏன் கவலை (Why is India worried) : அமெரிக்காவில் சினூக் ஹெலிகாப்டர் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்திய விமானப்படையிலும் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட‌ CH-47 தொடரின் சினூக் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. காஷ்மீர், லடாக் மற்றும் சியாச்சின் போன்ற மிகவும் உயரமான‌ பகுதிகளுக்கு ராணுவ உபகரணங்கள், வீரர்கள், அதிக எடை உள்ள‌ பொருள்களை கொண்டு செல்ல‌ இந்த சினூக் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. 2019 பிப்ரவரியில் சினூக் ஹெலிகாப்டர் களின் முதல் தொகுப்பை இந்திய விமானபடைக்கு துணையாக இருந்து வருகின்றன. 2020 இல் மொத்தம் 15 சினூக் ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் இடம் பெற்றிருந்தன.

தற்போது அமெரிக்காவில்தான் சினூக் ஹெலிகாப்டர்களில் தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன‌. அமெரிக்க ராணுவ அதிகாரி (American military officer) ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார், தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்து சம்பவ‌ங்கள் சிறியதாக உள்ளன. முன் ஜாக்கிரதை நடவடிக்கையாக நாங்கள் சினூக் ஹெலிகாப்டர்களின் சேவைகளை தடை செய்துள்ளோம். தற்போது 70 ஹெலிகாப்டர்களில் இந்த வகையான பிரச்சனை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

சினூக் ஹெலிகாப்டர்கள் சேவை நிறுத்தி உள்ளது அமெரிக்க ராணுவத்திற்கு மற்றொரு சவாலாக அமைந்துள்ளது. ஏனென்றால் அமெரிக்க ராணுவத்தில் 400க்கும் அதிகமான சினூக் ஹெலிகாப்டர்கள் சேவையில் ஈடுபட்டிருந்தன‌. அந்நாட்டு ராணுவம் அதிகமாக இந்த‌ ஹெலிகாப்டர்களை நம்பி இருந்தது. அமெரிக்காவில் இந்த ஹெலிகாப்டரின் சேவைகளை நிறுத்தி உள்ளதால், தற்போது அது இந்தியாவிற்கும் பிரச்சனை ஆகி உள்ளது. இதனால் சினூக் ஹெலிகாப்டர்களின் சேவையை தொடருவதா, வேண்டாமா என்பது குறித்து இந்திய விமானப் படை ஆலோசனை செய்து வருகிறது. அமெரிக்காவில் சினூக் ஹெலிகாப்டர்கள் சேவை நிறுத்தி உள்ள நிலையில், இந்திய விமானப்படையில் அதன் சேவையை நிறுத்தாவிட்டால், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யுமோ என்ற அச்சத்தில் பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) தலைமையிலான அரசு சிந்தித்து வருகிறது.