அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் ஒரு சில மாதங்களில் (Ayodhya Ram Temple Ready By Next Year) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி அங்கு சப்ரூம் என்ற இடத்தில் பா.ஜ.க. ரத யாத்திரியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:
காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ராமஜென்மபூமி வாழ்க்கை நீண்ட காலமாக நீதிமன்றத்திலேயே வைத்துக்கொண்டு இழுத்தடித்து வந்தனர். ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அளித்தவுடனேயே பிரதமர் மோடி பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.
நான் ராகுல்காந்திக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். அடுத்த ஆண்டு 2024 ஜனவரி 1ம் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் பணிகள் தயாராகிவிடும். தற்போது பிரதமர் மோடி கைகளில் பாதுகாப்பாக நாடு உள்ளது.
மேலும் கடந்த 2019ம் ஆண்டு காஷ்மீரில் புல்வாமாவில் மிகப்பெரிய தாக்குதல் நடைபெற்றது. இதற்காக இந்திய வீரர்கள் பாகிஸ்தானில் நுழைந்து மிகப்பெரிய தாக்குலை நடத்தி எதிரிகளை கொன்றனர். இவ்வாறு அவர் கூறினார்.