அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு துணை ராணுவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு

Agneepath Scheme Protest
அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு துணை ராணுவத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு

Agnipath protests: ராணுவத்துக்கு ஆள் சேர்க்க ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 ரெயில்களை தீயிட்டு கொளுத்தினர். இன்று 4-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், “அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய துணை ராணுவ படைகள் மற்றும் அசாம் ரைபிள்களில் ஆட்சேர்ப்புக்காக அக்னிவீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும், அக்னிவீரர்களின் முதல் பேட்சுக்கு, நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்” என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Omicron: ஒமைக்ரான் வைரஸ் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தாது