3 Members Of The Same Family Committed Suicide: மன உளைச்சலால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: பெங்களூருவில் அதிர்ச்சி

பெங்களூரு: பெங்களூருவில் மன உளைச்சல் (3 Members Of The Same Family Committed Suicide) காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் சத்தியநாராயண ராவ். இவர் டாக்டராக இருந்துள்ளார். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய குடும்பத்தினருடன் பெங்களூருவில் குடியேறியிருக்கிறார். இவர்கள் அனைவரும் நாகர்பாவியில் வசித்து வந்தனர். இதில் சத்தியநாராயண ராவ் 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சத்தியநாராயண ராவ் மறைவுக்கு பின்னர் நாகர்பாவியில் இருந்து மகாலட்சுமி லேஅவுட்டில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினர். அங்கு சத்தியநாராயண ராவின் மனைவி யசோதா 70, அவரின் மகள் சுமன் 41, மகன் நரேஷ் 36 உள்ளிட்ட 3 பேர் மட்டும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், இவர்கள் 3 பேரும் நேற்று (டிசம்பர் 20) வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 10 பேர் மீது குற்றம்சுமத்தியுள்ளனர். இது பற்றி போலீசார் கூறும்போது, யசோதாவுக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். அதில் இரண்டு பேருடன் வசித்த வரும் நிலையில் மூத்த மகள் அபர்ணா மட்டும் ராஜாஜிநகரில் தன்னுடைய கணவனுடன் வசித்து வருகிறார். அவர்கள் கொடுத்த புகாரால்தான் சடலங்களை மீட்டோம் என்றனர்.

மேலும், மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட 10 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்திருப்பது பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தியை பார்க்க:Rafale Watch Bill: டீக்கடையில் ‘ரபேல் வாட்ச்’ பற்றி பேசுகிறார்களோ அப்போது பில்: அண்ணாமலை அதிரடி

முந்தைய செய்தியை பார்க்க:Elon Musk Says He Will Resign As Twitter Ceo: முட்டாள் மாதிரி ஒருவர் சி.இ.ஓ. கிடைத்தால் நான் ராஜினாமா செய்கிறேன்: எலான் மஸ்க்