Madhya Pradesh Bus, Truck Accident : பேருந்து – லாரி மோதிக் கொண்டதில் விபத்து: 15 பேர் பலி, 40 பேர் படுகாயம்

பேருந்தில் சுமார் 100 பயணிகள் இருந்தனர். ஹைதராபாத்தில் இருந்து கோரக்பூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலை 30 இல் விபத்து நிகழ்ந்தது.

மத்தியப் பிரதேசம்: (Madhya Pradesh Accident) பேருந்தும், கண்டெய்னர் லாரியும் மோதிய பயங்கர விபத்தில் (பஸ் டிரக் விபத்து) 15 பேர் உயிரிழந்தனர், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் ராவாவில் நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகின்றது. போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் கோரக்பூருக்குச் சென்ற கொண்டிருந்த பேருந்து (The bus was going to Gorakhpur, Madhya Pradesh) ரேவா சுஹாகி பஹாரி அருகே கண்டெய்னர் லாரி மீது மோதியதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தின் தீவிரத்தால் பேருந்து முற்றிலும் நொறுங்கியது. கண்டெய்னர் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பிரயாக்ராஜ் (உபி) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட தகவலின்படி (Madhya Pradesh Bus Truck Acciden), பேருந்தில் சுமார் 100 பயணிகள் இருந்தனர். ஹைதராபாத்தில் இருந்து கோரக்பூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது.இந்த விபத்து வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் தேசிய நெடுஞ்சாலை 30 இல் நிகழ்ந்தது. பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் கூலித்தொழிலாளர்கள் என்றும் ரேவா காவல் கண்காணிப்பாளர் நவ்நீத் பாசின் தெரிவித்தார். அவர்களில் பெரும்பாலானோர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கட்னி என்ற இடத்தில் பேருந்தில் ஏறினர். ஹைதராபாத்தில் இருந்து தனி பேருந்தில் கட்னி சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி (Diwali festival) தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் இந்த சோகம் நடந்துள்ளது. விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகன போக்குவரத்தை அனுமதித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.