11,539 people have been infected with Corona: கடந்த 24 மணி நேரத்தில் 11,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுடெல்லி: In the last 24 hours, 11,539 people have been infected with Corona: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 209.67கோடியைக் கடந்தது. இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசியை பொறுத்தவரை இன்று காலை 7 மணி நிலவரப்படி 209.67 கோடிக்கும் அதிகமான (2,09,67,06,895) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன 2,79,10,768 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

12-14 வயதிற்குட்பட்டோருக்கான கொவிட்-19 தடுப்பூசி, 16 மார்ச் 2022 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, ஏறத்தாழ 3.99 கோடிக்கும் அதிகமான (3,99,63,095) இளம் பருவத்தினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 18-59 வயதுடையவர்களுக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது.

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 99,879 மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.23 சதவீதமாக உள்ளனர்.

இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.59 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,783 பேர் குணமடைந்துள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,37,12,218.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,539 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,07,680 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 88.24 கோடி (88,24,95,963) வாராந்திரத் தொற்று 3.88 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 3.75 சதவீதமாக பதிவாகியுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 200.02 கோடிக்கும் மேற்பட்ட (2,00,28,66,975) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 7.04 கோடிக்கும் மேற்பட்ட (7,04,44,690) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.