National LED Lighting Project: தேசிய எல்இடி விளக்குகள் திட்டத்தில் நாடு முழுவதும் 1.25 கோடி எல்இடி தெரு விளக்குகள்

தில்லி: 1.25 crore LED street lights: நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளில் 1.25 கோடி எல்இடி தெரு விளக்குகளை எரிசக்தி திறன் சேவை நிறுவனம் (EESL) நிறுவியுள்ளது.

தேசிய எல்இடி விளக்குகள் திட்டத்தை (National LED Lighting Project) கடந்த 2015 ஜனவரி 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் வழக்கமான தெரு விளக்குகளுக்குப் பதிலாக ஆற்றல் திறன் கொண்ட எல்இடி தெரு விளக்குகள் உருவாக்கப்பட்டன.

இன்றுவரை, எரிசக்தி திறன் சேவை நிறுவனம் (Energy Efficiency Services Limited) இஇஎஸ்எல் இந்தியா முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளில் 1.25 கோடிக்கும் அதிகமான எல்இடி தெரு விளக்குகளை நிறுவியுள்ளது.

எரிசக்தி திறன் சேவை நிறுவனத்துடன் அமலாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இது செயல்படுத்தப்படுகிறது. தற்போது, எரிசக்தி திறன் சேவை நிறுவனம் 23 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களில் தெரு விளக்கு தேசிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

மேலும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு எரிசக்தி திறன் சேவை நிறுவனம் பரிந்துரை வழங்கியுள்ளது. மேலும் அந்தந்த மாநிலம், யூனியன் பிரதேச நிர்வாகம் அதை ஏற்றுக்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்போது, தெரு விளக்குகளை (Street Light) மாற்றுவது மேற்கொள்ளப்படும்.

தற்போது 1,615 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன், எஸ்எல்என்பி- யின் கீழ் வழக்கமான தெரு விளக்குகளை எல்இடி தெரு விளக்குகளாக (LED Street Light) மாற்றுவதற்கு எரிசக்தி திறன் சேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன. எஸ்எல்என்பி இதுவரை 8.5 பில்லியன் யூனிட்களை ஆண்டுக்கு ரூ.6800 கோடிக்கு சமமாக சேமிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.