Applications are invited for the posts of Manager: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தருமபுரி: Applications are invited for the posts of Manager in Agriculture and Farmers Welfare Department. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தருமபுரி மாவட்டத்தில் ‘அட்மா (Agleatural Technology Management Agency) எனப்படும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி தேர்வு முகமை மூலம் (Placement Agency) வட்டார அளவில் காலியாக உள்ள ஒரு வட்டார தொழில்நுட்ப மேலாளர் மற்றும் 3 உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் என 4 காலி பணியிடங்களுக்கும் தகுதிவாய்ந்த பணியாளர்களைக் கொண்டு பணியிடங்கள் நிரப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் பணியிடத்திற்கு வேளாண்மை/ தோட்டக்கலை | வேளாண் பொருளாதாரம் / கால்நடை மருத்துவ அறிவியல் / கால்நடை வளர்ப்பு / மீன் வளர்ப்பு ஆகிய பாடங்களில் முதுநிலைப் பட்டப்படிப்புடன் கணிணி இயக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

உதவி தொழில்நுட்ப மேலாளர்களுக்கான பணியிடங்களுக்கு வேளாண்மை / தோட்டக்கலை / வேளாண் பொருளாதாரம் / கால்நடை மருத்துவ அறிவியல் | கால்நடை வளர்ப்பு / மீன் வளர்ப்பு ஆகிய பாடங்களில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்கள் யாவும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு அரசால் நிர்ணயித்துள்ள தொகுப்பூதியம் வழங்கப்படும்.

எனவே அனுபவம் வாய்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பணிநியமன முகமைகள் (Private Recruitment Agency) தங்க ளது முகமையின் அடிப்படை விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை திட்ட இயக்குநர் (அட்மா) / வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி-636705 என்ற முகவரிக்கு 07.10.2022 தேதிக்குள் விண்ண ப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.