Refrigerator explosion accident: சென்னையில் ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து; 3 பேர் பலி

சென்னை: Refrigerator explosion accident in Chennai. சென்னை ஊரப்பாக்கத்தில் ஃபிரிட்ஜ் வெடித்து விபத்துக்குள்ளானதில் மூச்சுத்திணறி 3 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகர், ஜெயலட்சுமி தெருவில் பிருந்தாவன் அப்பார்ட்மெண்டில் வசித்து வருபவர் கிரிஜா. இவருடன் அவரது வீட்டில் ராதா, ராஜா என்ற தனது 2 உறவினர்களுடன் தங்கியுள்ளார். கிரிஜா நேற்று துபாயிலிருந்து சென்னை வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் மூவரும் தூக்கிக்கொண்டிருந்தபோது, மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக வீட்டிலிருந்த ஃபிரிட்ஜ் கம்ப்ரசர் வெடித்துள்ளது. இதனால் எழுந்த புகையில், மூச்சு விட முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கிரிஜா, ராதா, ராஜா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஃபிரிட்ஜ் வெடிப்பின்போது, கிரிஜாவின் வீட்டிலிருந்து புகை வருவதைக் பார்த்த அக்கம்பக்கத்தினர் கதவைத் தட்டி அவர்களை எழுப்பியுள்ளனர். ஆனால், யாரும் கதவை திறக்கவில்லை இந்நிலையில், தீயணைப்பு துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின்பேரில் அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மூவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத்தொடரந்து வீட்டினை ஆய்வு செய்த தீயணைப்பு துறையினர், மின்கசிவு ஏற்பட்டு ஃபிரிட்ஜ்ஜின் கம்ப்ரசர் வெடித்ததில் உண்டான புகைமூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற ஃபிரிட்ஜ் வெடிப்பு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.