Thieft locked house: திண்டிவனத்தில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து திருட்டு: பொதுமக்கள் தர்ம அடி

திண்டிவனம்: The people who broke into the locked house in Tindivanam and beat up the thief: திண்டிவனத்தில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து திருடியவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் (Tindivanam) அருகே உள்ள சிறுநாங்கூர் ராயல் தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 65). இவர் தனது வீட்டை பூட்டிக்கொண்டு மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் சண்முகம் வீட்டிலிருந்து மர்ம நபர் ஒருவர், மூட்டையை எடுத்துச் சென்றவரை கிராம மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக சந்தேகத்தின்பேரில் அவரை பிடித்து மூட்டையை அவிழ்த்து பார்த்துள்ளனர்.

அந்த மூட்டையில் 20 கிலோ பித்தளை பாத்திரங்கள் இருந்தது. இந்த பாத்திரங்கள் அனைத்து சண்முகம் வீட்டிலிருந்து அவர் திருடியது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்து, வெள்ளிமேடுபேட்டை போலீசில் (Vellimedupettai Police) ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் பழங்குடி நகரை சேர்ந்த ரமேஷ்(45) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.