Pregnant minor dies : கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு சிறுமி மரணம்: காதலன் கைது

Pregnant minor dies : முருகன் என்பவர் தனது நண்பர் பிரபுவின் ஆலோசனையின் பேரில் சிறுமிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்துள்ளார்.

திருவண்ணாமலை: Pregnant minor dies : குழைந்தைகள் இளம் வயதில் எவ்வளவு கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் அவர்கள் தவறான பாதைக்கு கொண்டு செல்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். பெற்றோர்கள் எவ்வளவுதான் எச்சரிக்கையாக‌ இருந்தாலும், சில நேர‌ங்களில் குழந்தைகள் கை மீறி போய்விடுகின்றனர்.. இந்த வயதில் எடுக்கும் சில முடிவுகள் அவர்களின் வாழ்க்கையை சீரழித்துவிடும். அல்லது சில சந்தர்ப்பங்களில் அவர்கள் உயிரிழக்க நேரிடும். இதற்கு நேரடி உதாரணமாக தமிழ்நாட்டில் 15 வயது சிறுமி கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதன் மூலம் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 27 வயதான முருகனால் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். கருக்கலைப்புக்கு முயன்ற அவர் உயிரை இழந்துள்ளார்.

உயிரிழந்த அந்த‌ சிறுமியை முருகன் தினமும் பள்ளிக்கு விடுவது வழக்கம். இடையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு காலப்போக்கில் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால் சில நாட்களுக்கு முன்பு சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து முருகன் தனது நண்பர் பிரபுவின் ஆலோசனையின் பேரில் சிறுமிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்துள்ளார்.

பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக கூறி, சிறுமியை வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளார் முருகன். வழியில் சிறுமியை கருக்கலைப்பு மாத்திரையை உட்கொள்ளுமாறு முருகன் கூறியுள்ளார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட நிலையில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது சிறுமி திடீரென சுயநினைவை இழந்துள்ளார். இதனையடுத்து அந்த‌ சிறுமியை உடன‌டியாக அரசு மருத்துவமனைக்கு முருகன் அழைத்து வந்தார்.

அங்கு சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர் முருகனுக்கு தெரிவித்துள்ளார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் முருகன் மற்றும் அவரது நண்பர் பிரபுவை கைது செய்தனர். முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், கருக்கலைப்பு மாத்திரை கொடுத்தவர்களை தீவிரமாக‌ தேடி வருகின்றனர்.