policeman’s mother murdered: கால்களை கட்டி, காதை அறுத்து போலீஸ்காரரின் தாய் கொடூரக் கொலை

File Picture

கடலூர்: policeman’s mother murdered: கடலூர் காவலர்கள் குடியிருப்பு பகுதியில் போலீஸ்காரரின் தாயை காதை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தின் (Cuddalore SP Office) பின்புறத்தில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. அங்கு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், பெண்ணின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

தகவலின்பேரில் அங்கு விரைந்த போலீசார், கால்களை கட்டியும், காதை அறுத்தும் முகத்தில் கொடூரமாக தாக்கிய நிலையில் பெண் சடலம் கிடந்துள்ளது. அந்த பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு (Cuddalore Govt Hospital) பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் பண்ருட்டி அருகே உள்ள காங்கிருப்பைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற காவலர் சதாசிவம் என்பவரின் மனைவி மலர்கொடி (50) என்பது தெரிய வந்தது. இவரது மகன் சிவகுரு, கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் (Cuddalore Pudhunagar Police Station) பணியாற்றி வருகிறார். மேலும் அதே குடியிருப்பிலேயே வசித்து வருகிறார். காங்கிருப்பிலிருந்து மருத்துவமனைக்கு செல்வதற்காக அங்கு வந்த நிலையில், கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த புதுநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் குடியிருப்பு பகுதியிலேயே நடந்த கொடூர கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.